இந்தியா

தோனியின் மகளை பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்த சிறுவன்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அகமதாபாத்: 

IPL கிரிக்கெட் செப்டம்பர் 19-ம் தேதியிலிருந்து நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.

பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.

ALSO READ  மோடி அலையால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது - எடியூரப்பா தகவல்

தோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ‘ஷிவா தோனி’யை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிடப்பட்டது.

தோனியின் மைனர் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது நிரம்பிய +2 படிக்கும் சிறுவன் என்று தெரியவந்தது.இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது.?? மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்….

naveen santhakumar

ரூ.7.4 கோடி சர்வதேச பரிசு – பாதி பணத்தை 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வழங்கும் மராட்டிய ஆசிரியர்

naveen santhakumar

மார்ச் 29-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை

naveen santhakumar