பெங்களூரு:
தற்போது கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா இனி வரும் கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸை யாரும் ககுறித்து மதிப்பிட கூடாது என தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் நமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளது. எனவே இனி பாஜக வெற்றிக்கு மோடி அலை பயன்படாது என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 ஆண்டுகளில் வர உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகத் தாம் இனி தொடர்ந்து பணி புரியப்போவதாகவும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மோடி அலையால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது என தெரிவித்துள்ளது பாஜகவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.