புதுடில்லி:
கொரோனா தொற்று காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க வரும் 31ம் தேதி வரை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் வழங்கியிருந்தது.
தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே புதுப்பிக்கக் கோரி பேட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தால் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் புத்தடுப்பிக்க மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிப்பது, பரிசீலிப்பதை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.