2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் இந்த ஏலத்தில் 48 வயது வீரரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்து உள்ளது.கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல வீரர்கள் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாகவும், பலர் குறைந்த தொகைக்கு ஏலம் போயுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ஏலத்தின் போது 48 வயது நிரம்பிய பிரவீன் தாம்பே ரூபாய் 20 லட்சம் அடிப்படை விலையில் அறிவிக்கப்பட்டார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் களமிறங்கிய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன் பின் விளையாடாத இவரை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்காதே என அனைவரும் நினைத்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கொல்கத்தா அணி அவரை ரூபாய் 20 லட்சம் அடிப்படைத் தகுதி தேர்வு செய்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.