விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தெம்பா பவுமா அதிகப்பட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் ஜோர்டான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ  மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

இதனைத்தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்(70 ரன்கள்), இயான் மோர்கன்(52 ரன்கள்) அதிரடியாக விளையாடியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தின் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி நாளை (பிப்ரவரி 14) நடைபெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூப்பர் ஓவர் ராசி… இந்தியா மீண்டும் வெற்றி

Admin

டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி

Admin

‘தல தோனி’தான் கிரேட்… சொன்னது யார் தெரியுமா?

Admin