சென்னை:-
பெண் இயக்குனர் பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய ‘சைக்கோ’ டைரக்டர் மிஷ்கின்.
எந்த நடிகனும் ஒரு படத்தின் கதாபாத்திரமாகவே ஆன முடியாது, என்றும் எப்படி என் படத்தில் யாராவது அப்படி சொன்னால் வெளியே போடா!! என்று சொல்லி விடுவேன் என்று பேசினார்.
மிஷ்கின் தான் இயக்கிய ‘சைக்கோ’ படத்தை ஒரு ரசிகன் ஒரு தடவைக்கு மேல் பார்த்தேன் என கூறினான் என்றும்; அப்படி ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதற்கு என்னுடைய சைக்கோ படத்தில் ஒரு ‘ஹேரும் இல்லை’ என்றும்; பார்த்த அவனுக்கு ஒரு வேலைவெட்டியும் இல்லை என்று சாடினார் மிஷ்கின்.
அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை நான் மது அருந்தவில்லை, அவ்வாறு மது அருந்தி இருந்தால் ‘பாரம்’ படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு சென்று அவர் காலில் விழுந்து இருப்பேன் என்றும் கூறினார்.
அதே விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ராம் , தேசிய விருது பெற்ற படங்கள் அனைத்தும் நல்லபடங்கள் அல்ல; தேசிய விருது பெறாத படங்கள் எல்லாம் கெட்ட படங்கள் அல்ல, என்றார்.