உலகம்

ஊரடங்கு: ஓட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு 40 பிரம்படி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜகார்தா:-

கடும் கட்டுப்பாடுகளுக்கும் தண்டனைகளுக்கும் பெயர் போன நாடு இந்தோனேஷியா. இந்தோனேஷியாவில் இஸ்லாமியச் சட்டம் பின்பற்றப்படுவதால் அங்கு தண்டனைகளும் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் இந்தோனேசியாவில் ஊரடங்கின் போது ஹோட்டல் அறையில் உல்லாசத்தில் ஈடுபட்ட ஜோடிக்கு 40 பிரம்பு அடி தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவில் விதிகளை மீறுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

ALSO READ  முதலையின் தலையில் மாட்டிக்கொண்ட டயர்... பரிசுத்தொகை அறிவிப்பு

இந்நிலையில்  ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத ஒரு ஜோடி ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளது. இதை அறிந்த மாகாண போலீசார் அவர்களை பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர்.  இதேபோல் மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 தடவை பிரம்பு படி தண்டனை கிடைத்தது.

இந்தோனேஷியாவில் 2001 ஆம் ஆண்டு ஷரியா சட்டம் (Sharia Law) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி அதிகபட்ச குற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு சிறையில் 100 பிரம்படிகள் தண்டனை வழங்கப்படும்.

ALSO READ  அரியவகை காண்டாமிருகம் கண்டுபிடிப்பு:

இந்தோனேஷியாவில் இதுவரை 7,000 மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர், 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா மற்றும் மேற்கு சுமத்ரா ஆகியவை கொரோனா ஹாட் ஸ்பாட்கள் (Hot Spots) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை…. தோலின் நிறம் கருப்பாக மாறிய மருத்துவர்கள்…..

naveen santhakumar

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்:

naveen santhakumar

துருக்கி காட்டுத்தீயில் சிக்கி பலர் படுகாயம் மற்றும் உயிரிழப்பு :

Shobika