அரிசோனா:-
அமெரிக்காவில் கொரோனா தொற்று அச்சத்தினால் ஏராளமான விமானங்கள் அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் அரிசோனா அறிக்கை பினல் கவுண்டியில் உள்ள பினல் ஏர் பார்க் நூற்றுக்கணக்கான வணிக மற்றும் ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.
பினல் ஏர் பார்க் சவுத் பீனிக்ஸ் இல் இருந்து 90 மைல் தொலைவில் உள்ளது இங்கு வைரஸ் பரவல் காரணமாகவும், விமானங்கள் துருப் பிடிப்பதில் இருந்து பாதுகாக்கவும் பாலைநிலத்தில் நிறுத்தியுள்ளதாக விமான நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா ஏர்லைன்ஸ், ஜெட்புளு மற்றும் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான 100க்கும் அதிகமான விமானங்களும், ராணுவ விமானங்களும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏர்போர்ட் 2080 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இதில் உள்ள ஒற்றை ஓடுபாதை 7,000 அடி நீளம் கொண்டது.
இதனால் விமான நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது.