இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஃப்ரீயா அயூப்.22 வயதான இவருக்கு மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்று பட்டம் வெல்ல வேண்டும் என்பது கனவாக இருந்தது ஆனால் திடீரென்று ஒருநாள் தலைவலி என்று சோபாவில் படுத்து இருக்கிறார்.
அதற்கு பிறகு அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க, மருத்துவர்கள் 22 வயதான ப்ரீயா அயூப்பிற்கு பக்கவாதம் வந்திருப்பதாக கூறி இருக்கிறார்கள் .இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியா இனி தன்னால் அழகிப் போட்டியில் பங்கேற்க முடியாது என்கின்ற செய்தியை கேட்டு மனம் உடைந்து போயிருக்கிறார் .பல மாதங்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு பேச்சு கூட அந்த காலகட்டத்தில் சரியாக வரவில்லை என்று பயந்து நடுங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார் .உடலளவில் பாதிக்கப்பட்ட நிறைய பேர் அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதை செய்திகளில் படித்திருக்கும் இவர் அவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்த ஆண்டு அழகிப் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .