சென்னை:-
நடிகை நயன்தாரா கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தமிழகத்தில் சென்னையிலும் நாளுக்குக்ஷநாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாதங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த சிலர் கொரோனா அறிகுறியால் தனிமையில் இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து விக்னேஷ் சிவன் தரப்பில் கூறுகையில்:-
நாங்கள் நலமாக இருக்கிறோம். நான் என் படத்திற்கான கதை விவாதத்திலும், நயன்தாரா, தினமும் உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். எங்களுக்கு கொரோனா தொற்று என்பதில் உண்மை இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.