சினிமா

இறந்த கணவருடன் வளைகாப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தனது 39 வயதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா, அவர் கணவர் இறந்த போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். மேக்னா தமிழில் “காதல் சொல்ல வந்தேன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மேக்னாவிற்கு சமீபத்தில் இரட்டைக்குழந்தை பிறந்ததாக வதந்திகள் பரவி வந்தது.அதற்கு அவர் மறுப்பும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மேக்னாவிற்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது மறைந்த அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவாக அவரது ஆள் உயர கட்அவுட் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

ALSO READ  மனைவி இறந்த துக்கத்தில் தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவர்:

அது அவர் உயிரோடு இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இத்தகைய புகைப்படங்களை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சித்ரா கொலை வழக்கு….ஹேமந்த் ஜாமீன் மனு…..வழக்கு ஒத்திவைப்பு…..

naveen santhakumar

‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

Admin

தென்னிந்தியாவை அதிர செய்த சூர்யா ரசிகர்கள்…!

naveen santhakumar