சினிமா

யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று; பி.சி.ஸ்ரீராம் கருத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவரின் ஒளிபதவினால் தமிழ் சினிமாவை உலக சினமா அளவிற்கு முன்னிறுத்தி அனைவரையும் வியக்கவைத்தவர். இந்நிலையில் பி.சி ஸ்ரீராம் 12 விதமான பாரம்பரிய ஆடைகளை 12 மாடல் அழகிகளை வைத்து தி பிரைட் ஷாப் 2021 ஆண்டிற்கான காலண்டரை உருவாக்கியுள்ளார். இதனை நேற்று சென்னையில் வெளியிட்டார்.

ALSO READ  ஆர்யாவின் சகோதரிக்கு 32 கோடி பரிசு !


அதன்பின் செய்தியாளர்கள் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், தற்போது கையில் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் கேமரா மேன் ஆகிவிட்டார்கள். அதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

அவர்களுடைய திறமையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பெரிய இயக்குனர் 30 வருடங்களுக்கு முன்பு, எப்போது எல்லோருடைய கையில் கேமரா கிடைக்குதோ, அப்போது தான் கலைக்கான மேடையாக ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. யாருமே எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு புரட்சி நடக்கும் என்று. கலை அடுத்த லெவலுக்கு போகும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்கில் 100 சதவீத அனுமதி ரத்து !

News Editor

காற்றில் மறைந்த கனீர் குரல்… யார் இந்த மாணிக்க விநாயகம்?

naveen santhakumar

நல்லெண்ணெய் குளியலின் வழிமுறைகளும் நன்மைகளும்……

Shobika