இசைஞானி இளையராஜா தனது இசையால் உலகின் எல்லை அவரை தமிழனின் பெருமையை கொண்டு சேர்த்தவர். ஒரு மனிதனை வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தனது பாடல்கள் மூலம் எப்போதும் துணை நிற்பவர் இசைஞானி இளையராஜா.
இவருக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிறுவனத்துக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் கோடம்பாக்கத்தில் தனது பெயரிலேயே தனி ஸ்டூடியோ ஒன்றை தொங்கியுள்ளார்.அவர் தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கான இசையமைப்புப் பணிகளை இங்கு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இளையராஜாவின் இந்தப் புதிய ஸ்டூடியோவிற்கு நேற்று திடீர் வருகை புரிந்து தனது வாழ்த்துக்களை கூறினார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.