சூரத் :
பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு, போனஸ் என்று வழங்குவார்கள் . அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவர் அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தனது 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் கொடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தவார் தெரிவித்துள்ளார்.
மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக கொடுத்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு காரணம் என்பது மட்டுமல்லாது , சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருவதாக நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.