தமிழகம்

தஞ்சை மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்… மாவட்ட எஸ்.பி. பகிரங்க எச்சரிக்கை!

Lavanya
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மதமாற்ற விவகாரம் இருந்ததாக பாஜகவினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து மாணவி, கடந்த 9ம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று, விடுதி அறையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டு, அவருக்கு உடல் நிலை சரியில்லை என வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த வீடியோவில் பள்ளி நிர்வாகம் மதமாற்ற வற்புத்தியதாகவும், மறுத்ததால் பள்ளியை தூய்மைப்படுத்த சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ  உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

இந்நிலையில் மாணவியை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அட்டகாசமான ரூல்ஸ்….இன்று முதல் அமலுக்கு வருகிறது…..மக்களே உஷார்…..

naveen santhakumar

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

naveen santhakumar

வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

naveen santhakumar