ஜார்ஜியாவில் 13 வயது சிறுவனுக்கு ஆசிரியை ஒருவர் நிர்வாணப் படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியா நாட்டில் இந்தியாவை சேர்ந்த ரூமா என்ற இளம்பெண் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த ஜனவரி 16ம் தேதி திடீரென கைது செய்யப்பட்டார்.
தனது வகுப்பில் பயிலும் 13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி தவறாக நடந்து கொண்டதாக தகவல் வெளியானது.
மேலும் அந்த சிறுவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது.. இதன்காரணமாக சிறுவன் பல சமயங்களில் அவரை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்றது தெரிய வந்தது.
இதனால் அந்த ஆசிரியை மீது சிறுவனை வன்கொடுமை செய்தல் மற்றும் தவறான நோக்கத்தில் நடத்தல் என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தண்டனையாக அந்நாட்டு காவல்துறை ஆசிரியையை நாடுகடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது