இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, சட்டை, கும்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.
அதனையடுத்து நடிகர் ராணா நடிப்பில் காடன் என்ற படத்தினை உருவாக்கிவருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சோயா ஹுசைன், புல்கிட் சாம்ராட், விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா உள்ளிட்டோர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு,ஹிந்தி போன்ற மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தினை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அதனையடுத்து படத்தின் படப்பிடிப்பு இந்திய முழுவதும் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. காடன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியிட்டு தள்ளிப்போனது. இந்நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந் து நிலையில் தற்போது தமிழக அரசு திரையரங்கில் 100 சதவீத பறவையாளர்களும் அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து உற்சாகம் அடைந்த படக்குழு காடன் படத்தினை வெளியிட தீவிரம் காட்டி வந்தது. ஆனால் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில் மீண்டும் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.
அதனையடுத்து காடன் படக்குழு படத்தின் வெளியிட்டு தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், வரும் மார்ச் 26 ஆம் தேதி காடன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர். தற்போது இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#kaadan #Raana #vishunuvishal #Tamilthisai #Tamilcinema