சினிமா

தீனி படம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியாகியபடம் ஓ மை கடவுளே. இந்த படம் வெளியாகி அணைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்புனை பெற்றது. இந்நிலையில் அனி.ஐ.வி.சசி இயக்கத்தில் அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வரும் 26ஆம் தேதி ‘தீனி’ படம் நேரடியாக ‘ஜீ ப்ளெக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் நடிகை நித்யா மேனன் இப்படம் குறித்து அண்மையில் ஒரு பேட்டியில்   கூறும்போது,”இப்படம் நான் இதற்கு முன் நடித்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. ‘அலா மொதலைந்தி’ படத்தின்போது எப்படி நடிகர் நானி, இயக்குநர் நந்தினி ரெட்டி, நான் மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோமோ, அதேபோல் ‘தீனி’ படப்பிடிப்பின்போதும் நடிகர்கள் நாங்கள் நெருங்கிய நண்பர்களைப் போல இருந்தோம். இப்படம் பார்ப்பவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்” என்றார்.


Share
ALSO READ  45 பேருக்கு கொரோனா தொற்று; படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை ராய்லட்சுமியின் நீச்சல் உடை போட்டோஷீட்

News Editor

கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

News Editor

“ஜிமிக்கி கம்மல்” பாடலாசிரியர் கொரோனாவால் மரணம்..!

News Editor