மும்பை:-
வீட்டிலேயே எளிய முறையில் மாஸ் தயாரிப்பது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
கொரோனாவை தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நமக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத துணிகளை வைத்து மாஸ்க் தயாரிப்பது எப்படி என்பது குறித்து அதன் செய்முறை விளக்கத்தோடு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-
கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பிரச்சனை என்னவென்றால், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாஸ்குகள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் இதற்கு எளிதான தீர்வு இருக்கிறது.
நமது பிரதமர் கூறியது போல வீட்டிலேயே இதை உருவாக்க முடியும். எந்த ஒரு துணியையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது ஒரு துப்பட்டா,ஸ்கார்ஃப், பழைய சேலை எதையும் கொண்டிருக்கலாம். உங்களுக்கு இரண்டு பட்டைகள் தேவைப்படும். ரப்பர் பேண்டுகள், அல்லது கை பையில் உள்ள வளையங்கள் எதையும் பயன்படுத்தலாம். அவற்றை பயன்படுத்தி மாஸ்குகள் தயாரிக்கலாம் என்கிறார் வித்யா பாலன்.