இந்தியாவில் வரும் மார்ச் மாதம் பதிமூன்றாவது ஐபிஎல் டி20 தொடர் துவங்க உள்ளது.
இந்த தொடருக்கும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட ஒருவேளை தோனி ஏலத்தில் பங்கேற்று இருந்தால் ஏலத்தொகை நிச்சயம் கோடிகளில் எகிறி இருக்கும்.
முதல் சீசனில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையையும் ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பெற்றுத் தந்து சிறப்பான கேப்டனாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் தோனியை 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஏலத்தில் விடாமல் ரைட்டு மேட்ச் கார்டு எனும் முறை மூலம் தக்கவைக்க சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் முடிவெடுத்துள்ளார்.
இருப்பினும் ஒருவேளை தோனி ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை எடுக்க ஆர்வம் காட்டும் அணிகளில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மூன்றாவது அணியாக டெல்லி கேப்பிடல் அணி தோனியின் எடுக்க ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.
இருப்பினும் தோனி ஐபிஎல்லில் விளையாடும் வரை சென்னை அணிக்காக மட்டும் விளையாடுவேன் என்று தோனி ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது