தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திரிபுரா:
திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த 90 வயதான மூதாட்டியை கடந்த 24-ந்தேதி இரவு மர்ம நபர்கள் 2 பேர் கற்பழித்தனர்.
இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, தனது உறவினர்களிடம் தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார்.
பின்னர் மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.