மும்பை:
மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது செல்ல பிராணியுடன் இன்று பயணித்தார். செல்ல பிராணி மும்பையிலிருந்து சென்னைக்கு வருவதற்கான விமானக் கட்டணமாக ரூபாய் 2 லட்சம் செலுத்தி உள்ளார்.
மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் பயணி தனது செல்லப்பிராணியான நாய் குட்டியுடன் பயணிக்க அனைத்து வர்த்தக வகுப்பு (BUSINESS CLASS TICKETS) டிக்கெட்களையும் வாங்கி பயணித்துள்ளார். இதற்காக அவர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை விமானத்தின் கட்டணமாக செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. .
விமானங்களில் செல்லப்பிராணிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில விதிமுறைகளுடன் செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு வர ஏர் இந்தியா அனுமதி வழங்குகிறது.
இன்று நடந்த இச்சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு செல்லப்பிராணி மீதான அவரின் அன்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.