குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அணைத்து இடங்களில் போட்டியிடும் என கூறியதுடன் முதல் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.
குஜராத் மாநிலத்தில் வரும் பிப்ரவரி நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிட்டிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏவும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அதிஷி நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
அதனையடுத்து பேசிய இவர், “ஆம் ஆத்மி மாநிலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் முதல் முறையாக போட்டியிடும். இதன் மூலம் கட்சி குஜராத்தின் தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு வலுவான மாற்றாக நுழைகிறது. பாஜகவை அதிகாரத்திலிருந்து நீக்க ஆம் ஆத்மி கட்சி செயல்படும். குஜராத் மக்களின் கோரிக்கையின்பேரில் ஆம் ஆத்மி மாநிலத்தில் தேர்தல் அரசியலில் நுழைகிறது,
ஆனால் மிரட்டல் மற்றும் கவர்ச்சியான அரசியலுடன் பாஜக விளையாடுகிறது. பாஜகவுக்கு பயப்படாத ஒரு தலைவர் நாட்டில் இருந்தால், அது அரவிந்த் கெஜ்ரிவால்தான். மேலும் பாஜகவை பயமுறுத்தவோ, கவர்ந்திழுக்கவோ முடியாத ஒரு கட்சி இருந்தால், அது ஆம் ஆத்மி “என்று கூறினார்.
#aamaadmiparty #aravindhkejriwal #gujarat #Bjp #Tamilthisai