இந்தியா

கொரோனா அச்சம் காரணமாக ஒரே நாளில் 6 ஆயிரம் கோழிகளை உயிருடன் புதைத்த வியாபாரி……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோகக், கர்நாடகா:-

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரே நாளில் 6000 கோழிகளை கோழி வியாபாரி ஒருவர் மண்ணில் புதைத்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே கோகக் தாலுகாவின் நூல்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நஜீர் அஹமத் மகந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது பண்ணையில் இருந்த 6,000 கோழிகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மண்ணில் பெரிய குழி வெட்டி அனைத்து கோழிகளையும் அதனுள் போட்டு புதைத்துள்ளார்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் !

இதுகுறித்து நஜீர் அஹமத் கூறுகையில்:-

இந்த கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கோழிகறி மற்றும் முட்டை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மாட்டிறைச்சி விற்பனைக்கு விரைவில் தடை…. 

இந்த கொரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் யாரும் கோழிக்கறி வாங்குவதில்லை. இதனால் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது.

சமீபத்தில் 6 லட்சம் செலவு செய்து தான் கோழிகளை வாங்கினேன். தவிர பறவை காய்ச்சல் அச்சம் வேறு எனவே தான் இனி சமாளிக்க முடியாது என்று எண்ணி இந்த கோழிகளை மண்ணில் புதைக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை ரூ. 1000- இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்???? 

naveen santhakumar

Paytm செயலி தடையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை…..

naveen santhakumar