அரசியல்

“வேற எந்த உறவையாச்சும் பேசுனா நடக்கிறதே வேற”.. நடிகை விஜயலக்ஷ்மியை எச்சரித்த காளியம்மாள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கடந்த சில நாட்களாகவே நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது தமிழக அரசியலில் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரான காளியம்மாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கூட்டத்தில் காளியம்மாள் பேசியதாவது:-

எந்த மனிதரை பெண்களை வன்மைப்படுத்துவதாக ஒப்பிடுவது? ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம் தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு..

இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே? அண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு. வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களம் கொந்தளிச்சுடுவோம்..

ALSO READ  சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல் !

என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்…

ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன் என்று கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காளியம்மாளுக்கு இந்த கருத்துக்கு விஜயலட்சுமிக்கு பதிலடி தந்தும், சீமானை கேள்வி எழுப்பியும் பதில் வீடியோ போட்டுள்ளார்.

அதில்:-

காளியம்மாளுக்கு எல்லாம் தெரியுமா? காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. உங்க அண்ணன் 10 வருஷத்துக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியுமா??

என்ன பூச்சாண்டி காட்டிறீங்களா எனக்கு?

காளியம்மாள் எல்லாம் பேசக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை… உங்க வீட்டில ஏதாவது வேலை இருந்துச்சுன்னா, அவளை போய் பண்ண சொல்லுங்க, என்கிட்ட வேணாம்.. ஆதரவாளர்களை விட்டு மிரட்டுவதை நிறுத்திக்குங்க.. அடுத்து ஆடியோ எடுத்து வெளியிட போறேன்.

ALSO READ  ஜனவரி-5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்:

அதை எடுத்து விட்டேன்னு வெச்சுக்குங்க.. இறங்கிட்டேன்.. அன்னைக்கு உங்க தம்பிங்களை விட்டு அசிங்க அசிங்கமாக பேச வைக்கிறீங்க? எவனோ ஒரு நாய் என்னை பத்தி அசிங்கமா பேசறான்? இன்னைக்கு இவ.. தங்கச்சியாக இருந்துட்டு போகட்டும், எவளா இருந்துட்டு போகட்டும், எனக்கென்ன வந்துச்சு?

ஒன்னும் குடிமுழுகி போயிடல.. இப்பவும் சொல்றேன், என் சாவுக்கு சீமான்னு காரணம்ன்னு எழுதி வெச்சிட்டு, நான் சூசைட் பண்ணிடுவேன்.. அப்பறம் வெளியே வரவே முடியாது.. பண்ணட்டுமா.. எல்லாரும் அடங்குங்க என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் – எப்படி தெரியுமா?

News Editor

மே 2 ஆம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட வேண்டும்; அமைச்சர் ஜெயக்குமார்!

News Editor

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi