தமிழகம்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்(62) கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பழகனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலை - கனவை நனவாக்கிய லாரன்ஸ்!

2001, 2011 மற்றும் 2016 என மூன்று முறை இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காதணி விழா தகராறில் கணவன், மனைவி இறப்பு !

News Editor

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Shanthi

நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

News Editor