பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தாண்டு தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.