நேர்மையாக பணியாற்ற விடாமல் தடுப்பதால் வேலையை விட்டு செல்வதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
2011ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் காவல்துறையில் உதவி ஆய்வாளராக வேலையில் சேர்ந்த ராஜ்குமார் நேர்மையாக இருந்ததால் 9 ஆண்டுகளில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட ராஜ்குமார், முன்பு பணியாற்றிய ஆயுதப்படையின் பணிகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஜனவரி மாத சம்பளமும் அவ் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர், 15 நாள் விடுப்பில் சென்றார். அமைச்சுப்பணியாளர்கள் பணத்துக்காக கோப்புகளை சமர்பிக்காததால் ஆயுதப்படை தகவலை அளிக்கவில்லை என்றும், வங்கிக்கடன், மனைவியின் மருத்துவ செலவு ஆகியவற்றிற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் கூலி வேலைக்கு செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவு ஒன்றை இட, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.