தஞ்சாவூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் உள்ள கழிவறையில், தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி பிறந்த பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை தூய்மை பணியாளர் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருந்தது. அதற்குள் பெண் சிசு குழந்தை ஒன்று அமுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்தார் அவர்.
இதனை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி கபிலன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் பிராங்க்ளின் உள்ளிட்ட போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியினை ஆய்வு செய்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சிசிடிவில் பதிவான காட்சியில் இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்கு செல்வது பதிவாகியுள்ளது.
இதனிடையே பிறந்த பெண் குழந்தை கழிவறை தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.