தமிழகம்

True caller -ஆல் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேளுங்க

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Truecaller மூலமாக பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாலும், பெண்களை தன் வலையில் விழ வைப்பதையும் ஒரு தொழிலாக செய்து வந்துள்ளார்.

ஓய்வாக இருக்கும் நேரத்தில் truecaller செயலியில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் ஏதாவது பெண்கள் பெயர் வந்தால், அந்தப் பெண்ணின் நம்பரை சேமித்துக் கொண்டு அவர்களுடன் போலியாக பழகி வந்துள்ளார்.

ALSO READ  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் வழக்கு...உயர் நீதிமன்றம் உத்தரவு!

பின்பு அந்தப் பெண்களிடம் உரையாடி ஆபாச வீடியோக்களை பகிர்ந்து காதலிப்பது போல் நடித்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் இவ்வாறு செய்ய முயன்றபோது, அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் வினோத்தை கைது செய்துள்ளனர்.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 50 பெண்களின் வாழ்க்கையை வினோத் சீரழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi

கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள் – ட்விட்டரில் அஸ்வின்‌ வேதனை

naveen santhakumar

ஸ்மார்ட் வகுப்பறை நடத்துவதற்கு ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Admin