அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டெய்கோ வனவிலங்கு பூங்காவில் உள்ள கொரில்லா குரங்கு ஒன்று கண்ணில் புரை ஏற்பட்டு பார்வைக் கோளாறு இருந்துள்ளது. இந்தக் கொரில்லாவை சோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையால் சரி செய்யலாம் என முடிவெடுத்தனர்.
லெஸ்லி என்னும் 3 வயதான இந்தப் பெண் கொரில்லாவுக்கு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தற்போது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. கொரில்லா ஒன்றுக்கு உலக அளவில் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும் அந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அறுவை சிகிச்சை நிபுணர் கிறிஸ்ஹெய்செல் மனிதர்களின் கண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஆனால் முதல்முறையாக கொரில்லாவிற்கு செய்துள்ளார். மருத்துவர்கள் கூறுகையில், “மனித கண்கள் மற்றும் கொரில்லா கண்கள் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள உடற்கூறாயியல் ஒற்றுமையே எங்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை எளிதாக வெற்றிகரமாக முடிக்க உதவியது” என்றனர்.