இந்தோனேஷியா:
இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரழிவு நோயினால் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 18-ம் மாலை 6 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடலை 7 மணிக்கு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் என்று டெய்லி மெயில் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உறவினர்கள் சிறுமியின் உடலுக்கு இறுதிசடங்கு செய்துள்ளனர். அப்போது உடலை குளிப்பாட்டிய போது சிறுமி கண்களை லேசாக திறந்துள்ளார். மேலும் அவரது உடலில் வெப்பமும், இதயதுடிப்பும் இருந்து உள்ளது.
இதனையடுத்து சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு இறுதிசடங்குகள் முடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
இதய கோளாறு காரணமாக உயிரிழக்கும் நோயளிகள் சிலருக்கு மீண்டும் தன்னிச்சையாக இதய துடிப்பு ஏற்படுவது அரிதான ஒன்றாக கூறப்படுகிறது.
இதனை மருத்துவத்தில் Return of Spontaneous Circulation (ROSC) என்று அழைப்பார்கள். சில நிமிடங்களுக்கு அவர்களுக்கு உடம்பில் வெப்பம், இதயதுடிப்பு, அசைவு ஏற்படும். இதுபோன்று அரிதான சம்பவங்கள் நடக்கும், ஆனால் இதனால் அவர்கள் மீண்டும் உயிர்பிழைக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.