10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தெரிந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கங்கண சூரிய கிரகணம் சரியாக 10:15 மணிக்கு தொடங்கி மதியம் 1:45 மணி வரை நீடித்தது. சென்னையை பொறுத்தவரையில் சரியாக 10.25 மணிக்கு தொடங்கி மதியம் 1:41 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் இன்று சூரிய கிரகணம் 12 மணி வாக்கில் தெளிவாக தெரிந்தது.
நாட்டின் பிற பகுதிகளில் காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த சூரிய கிரகணம் 3.04 மணி வரை நீடித்தது. வட இந்தியப் பகுதிகளில் உட்சபட்சமாக பகல் 12:10 மணி வாக்கில் தெரிந்தது.
இதுபோல் சவுதி அரேபியா, மத்திய கிழக்கு, மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் ஆகிய பகுதிகளில் இந்த கங்கண சூரிய கிரகணம் தென்பட்டது.
ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் பகுதிகள், இந்திய பெருங்கடல் பகுதி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் ஒரு சில பகுதிகள் ஆகியவற்றில் இந்த கங்கண சூரிய கிரகணம் நிகழ்வு தென்பட்டது.
இந்த வருடத்தில் மொத்தம் இரண்டு சூரிய கிரகணங்கள். முதல் கிரகணம் இன்று நிகழ்ந்துவிட்டது. அடுத்த சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 14ம் தேதி தோன்ற உள்ளது. டிசம்பர் 14ம் தேதி தோன்றும் இரண்டாவது சூரிய கிரகணத்தை தென்அமெரிக்கா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் ஆகிய பகுதிகளில் தெளிவாக காணமுடியும். இந்திய பெருங்கடல், ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகியவற்றில் சில பகுதிகளில் தென் பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.