ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்து 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நொறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 170 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் மிகப்பெரிய விமான விபத்து நடந்துள்ளது. போயிங் 737 வகையை சேர்ந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுவதும் அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது.
தொடர்ந்து, விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர்,ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்ததில் பயணிகள், ஊழியர்கள் என 170 பேரும் பலியாகினர்.