தமிழகம்

15 போன்களில் Whatsapp chat.. கணவனின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்த மனைவி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுக்கோட்டையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் கேஷியர் தனது வாடிக்கையாளர்களிடம் தவறாக உறவு வைத்திருப்பதை மனைவி கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கேஷியராக ஜெயக்குமார் பணிபுரிகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இவர் தனது தனி அறையில் 15 செல்போன்களில் அடுத்தடுத்து பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் உரையாடிக் கொண்டு இருந்ததை அவரது மனைவி தற்செயலாக பார்த்துள்ளார்.

ALSO READ  சென்னையில் இறைச்சி விற்பனைக்கு தடை !

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, ஜெயக்குமார் இல்லாதபோது அந்த செல்போன்களை ஆய்வு செய்தபோது அதில் அவர் பல பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் உரையாடலில் ஈடுபட்டு இருந்த பெண்களின் வங்கி பாஸ்புக் புகைப்படங்கள், அப்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் ஆகியவைகளை பார்த்து தனது கணவர் வேலை செய்யும் வங்கியின் வாடிக்கையாளர்கள் என்பதை மனைவி தெரிந்துகொண்டார்..இதுகுறித்து கணவரிடம் கேட்டதற்கு கணவரும் அவரது அம்மாவும் மனைவியை திட்டியதாகவும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மிரட்டலை பொருட்படுத்தாது ஜெயக்குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமின்றி செல்போன்களில் உள்ள ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்தார். அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு :

Shobika

கொரோனா 3-வது அலை; வந்துவிட்டது 4.2 வைரஸ் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

naveen santhakumar

தமிழகத்தில் தேர்தல் எப்போது; தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!

News Editor