தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வெல்லிங்டன் டெஸ்ட்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
நியூசிலாந்துக்கு எதிரான நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீசியது. பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் நாள் போலவே ரன் குவிக்க இந்தியா திணறியது.
மேற்கொண்டு 43 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. 68.1 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தின் டிம் சௌதி, ஜேமிசன் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.