விளையாட்டு

2வது நாளில் 165 ரன்களில் சுருண்ட இந்தியா … திணறும் நியூசிலாந்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெல்லிங்டன் டெஸ்ட்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

நியூசிலாந்துக்கு எதிரான நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீசியது. பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் நாள் போலவே ரன் குவிக்க இந்தியா திணறியது.

ALSO READ  பிலியர்ட்ஸ் தேசிய சாம்பியன் பட்டம் வென்றார் பங்கஜ் அத்வானி

மேற்கொண்டு 43 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. 68.1 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தின் டிம் சௌதி, ஜேமிசன் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரெய்னா,ஜடேஜாவுக்கு சவால்விட்ட கோலி

Admin

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

டி.என்.பி.எல்., போட்டிக்கு தேர்வான தருமபுரி வீரர்

Admin