விராட் கோலி கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகம் ஆகியபோது எடுத்த போட்டோவையும், தற்போதுள்ள போட்டோவையும் வெளியிட்டு அற்புதமான மாற்றம் என பதிவிட்டுள்ளார்.
தனது அபாரமான ஆட்டத்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 11 வருடத்திற்கு முன் U-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பின், 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரும்போது அரும்பிய மீசை, தாடியுடன் அமுல்பேபி போன்று காட்சியளித்தார்.
தற்போது கடும் உடற்பயிற்சியின் மூலம் உடலை பிட் ஆக வைத்திருப்பதுடன், ட்ரிம் செய்த தாடியுடன் காட்சியளிக்கிறார்.இந்நிலையில் அப்போதைய படத்தையும், தற்போதைய படத்தையும் வெளியிட்டு அற்புதமான மாற்றம். நீங்களும் இதேபோன்று உங்களுடைய புகைப்படங்களை உலகிற்கு வெளியிடத் தயாரா? என்று ஜடேஜா மற்றும் ரெய்னாவிடம் கேட்டுள்ளார் விராட்.