தேசிய சீனியர் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி.
புனேவில் நடைபெற்ற போட்டியில் பங்கஜ் அத்வானி, தேசிய பிலியர்ட்ஸ் சாம்பியனுமான சௌரவ் கோத்தாரியை 5-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இதற்கு முன் நடந்த அரையிறுதி போட்டியில் குஜராத்தின் த்வாஜ் ஹரியாவை 5-0 என்ற நேர் செட்களில் வென்றது குறிப்பிடதக்கது.
இது பங்கஜ் அத்வானி வெல்லும் 33வது தேசிய மற்றும் 10வது சீனியர் லெவல் பட்டமாகும்.
இது குறித்து பங்கஜ் தெரிவிக்கையில், இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வெற்றியை எனது பயிற்சியாளர் அர்விந்த் சாவரின் மனைவி ஜோஷ்னா சாவருக்கு அர்பணிக்கிறேன். அவர் சமிபத்தில் தான் மறைந்தார். ஒரு தாய் போல என்னை பார்த்துக் கொண்டார். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்றார். பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் என இரு விளையாட்டு போட்டிகளிலும் அத்வானி வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.