‘எரும சாணி’ என்ற யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய், நடிகர் அருள்நிதி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘K 13’ படத்தைத் தொடர்ந்து ‘களத்தில் சந்திப்போம்’ மற்றும் ‘5 ஸ்டார்’ கதிரேசன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியவற்றை முடித்துள்ளார் அருள்நிதி.
அதனைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான கதைகள் கேட்கும் பணிகளைத் தொடங்கினார்.
அதில் ‘எரும சாணி’ விஜய் கூறிய கதை, அருள்நிதிக்கு மிகவும் பிடித்தது. இந்தப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் . ‘எரும சாணி’ விஜய் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார். இவரது வீடியோக்கள் யூ டியூப்-ல் மிகவும் பிரபலம்.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்.
இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் அருள்நிதியை அணுகினோம். ஏனென்றால் அவருடைய 5 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளேன். இந்தக் கதை கேட்டவுடன் உற்சாகமாகி உடனே ஒப்புக் கொண்டார் என்று அரவிந்த் சிங் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் அருள்நிதியுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.