சென்னை சைதாப்பேட்டை ஜினியஸ் சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் என்ட்ரி செய்யும் இயந்திரத்தை உடைக்க மர்மநபர் ஒருவர் முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஒலிக்கவே அவர்கள் காவல்துறை கட்டுப்பாடு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை காவல்துறைக்கு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஏடிஎம் மையத்தில் என்ட்ரி செய்யும் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்தனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையனின் புகைப்படங்களை மும்பை எஸ்.பி.ஐ தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர். அதனை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரமா அல்லது என்ட்ரி செய்யும் இயந்திரமா என்பது கூட தெரியாமல் கொள்ளையன் உடைத்து இருக்கிறான் என்பதால் முதல்முறையாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.