தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாகவும், ‘100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறிதான்’ என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து மின்சார கட்டண உயர்வு குறித்து கூறும்போது, வரலாறு காணாத வகையில் மின்சாரக்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாகவும், இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் ஏழை எளிய மக்கள், வியாபாரிகள், தொழில் முதலீட்டாளர்கள், அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறி என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளதாகவும் இனி வருடத்திற்கு ஒருமுறை 6 சதவீதம் உயர்த்தப்படும் என்பதும் சூட்சகமாக சொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த அரசு சாமானிய மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.