சிலர் செய்யும் வேலையை மிகவும் பிடித்து செய்வார்கள். சிலர் வேறு வழியின்றி தனக்கு பிடிக்காத வேலையை அன்றாட உணவிற்காக செய்து வருவார்கள். அப்படி குப்பை பொறுக்கும் தொழிலை செய்து வரும் தாய்லாந்தை சேர்ந்த சுராசெட் சஞ்சு என்பவருக்கு கடலோரம் கிடைத்த பொருள் அவரை கோடீஸ்வரராக்கி உள்ளது.
ஆம், திமிங்கலத்தின் வாந்தி தான் அது. திமிங்கலத்தின் வாந்திக்கு இத்தனை விலை உள்ளதா என்று கேட்கிறீர்களா ? , ஒரு வகையான திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து உருவாகும் ஆம்பர் கிரீஸ் எனப்படும் வாந்திக்கு நறுமண தன்மை உண்டு. இது நீடித்து இருக்க கூடிய நறுமணம் என்பதனால் பெரிய நிறுவனங்கள் இந்த ஆம்பர்கிரீசை பயன்படுத்தி வாசனைப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
ஆம்பர் கிரீசின் ஒரு கிலோவின் விலை 13 லட்சம் ஆகும். சுரா செட் சஞ்சு விற்கு 16 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ் கிடைத்துள்ளது. இதன் மூலம் சாதாரண குப்பை பொறுக்கும் பவராக இருந்த சஞ்சு தற்போது கோடீஸ்வரராகி சர்வதேச ஊடகங்களில் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஆனால் திமிங்கலத்தின் வாந்திக்கு இத்தனை மதிப்பு இருக்கிறது என்பது சாமானிய ஒருவருக்கு தெரியாது என்பதால் சில நேரங்களில் ஆம்பர் கிரீஸ் குப்பையோடு குப்பையாக வெளியேற்றப்படுகிறது.