இந்தியா

சூட்கேசுக்குள் நண்பனை அடைத்த மாணவன்… சிக்கியது எப்படி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


மங்களூரு:-

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நண்பனை அழைத்து வர நூதன முறையை கையாண்டிருக்கிறான் கல்லூரி மாணவன் ஒருவன்.

ஆர்யசமாஜ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவன் ஒருவன், தனியாக தங்கி இருக்க பயந்து, நண்பனை அழைத்துவரத் திட்டமிட்டான். ஆனால் குடியிருப்போர் சங்கத்தினர் வெளியாட்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், பெரிய சூட்கேசுக்குள் தனது நண்பனை அடைத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான்.

ALSO READ  இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்.....

சூட்கேஸை சிரமப்பட்டு தூக்கிவந்தான் அந்த மாணவன், திடீரென சூட்கேஸ் அசைந்ததைக் கண்ட குடியிருப்புவாசிகள் அதைத் திறக்கச் சொல்லி வற்புறுத்தினர். முதலில் மறுத்த அந்த மாணவன் வேறு வழியின்றி சூட்கேசை திறந்து காட்ட, அதில் பதுங்கி இருந்த நண்பன் வெளியே வந்தான். 

உடனடியாக, தகவல் அறிந்து விரைந்து வந்த கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் இருவரையும்  ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு (Juvenile Justice Board) முன்பு ஆஜர்படுத்தினார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இடியால் சேதமான தாஜ்மஹால்… 

naveen santhakumar

கெஜ்ரிவாலின் டெல்லி மருத்துவமனைகள் டெல்லிக் காரர்களுக்கே என்ற உத்தரவை ரத்து செய்த துணை நிலை ஆளுநர்.. 

naveen santhakumar

இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு- வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தங்கம்?

naveen santhakumar