புதுடெல்லி:-
இந்தியா, இலங்கை உள்பட 13 உறுப்பு நாடுகளில் வரும் காலங்களில் வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் எழுச்சி உண்டாகும் என India Meteorological Department (IMD) எச்சரித்துள்ளது.
உலகளவில், உள்ள பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (Regional Specialised Meteorological Centres (RSMC)) மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் (Tropical Cyclone Warning Centres (TCWCs)) உள்ளன, அவை வெப்பமண்டல சூறாவளிகளின் ஆலோசனைகளையும் பெயர்களையும் வெளியிடுகின்றன.
மேற்கண்ட ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் நமது IMD-வும் ஒன்று. நாம் 13 உறுப்பு நாடுகளுக்கு புயல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஏமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் 13 உறுப்பு நாடுகளுக்கு வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் எழுச்சி ஆலோசனைகளை வழங்கும் ஆறு RSMC-களில் IMD-யும் ஒன்றாகும்.
IMD தகவல்படி, பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 உறுப்பு நாடுகளில் வரும் காலங்களில் வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் எழுச்சி உண்டாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளிகளின் பெயர்களின் விரிவான பட்டியலை இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 சூறாவளிகளின் பெயர்கள் என, மொத்தம் 169 பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான பெயர்களில் கதி, தேஜ், முரசு, ஆக், வயோம், ஜார், புரோபஹோ, நீர், பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலாதி மற்றும் வேகா ஆகியவை அடங்கும்.
பங்களாதேஷின் பெயர்களில் சில நிசர்கா, பிபார்ஜோய், அர்னாப் மற்றும் உபகுல் ஆகும்.
வெவ்வேறு கடல் படுகைகளில் உருவாகும் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு சம்பந்தப்பட்ட RSMC-கள் மற்றும் TCWC-க்கள் பெயரிடப்பட்டுள்ளன. வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடலுக்கு, RSMC ஒரு நிலையான நடைமுறையைப் பின்பற்றி வெப்பமண்டல சூறாவளிகளுக்கு பெயரை ஒதுக்குகிறது, என IMD ஒரு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.