தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் ரேகாவின் கணவர் தனது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளித்திரையில் படங்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் தான் சின்னத்திரையிலும் சீரியல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சீரியலில் நடித்த கதாநாயகிகள் தற்போது சின்னத்திரையிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.சமீபத்தில் ஜெயஸ்ரீ மற்றும் மகாலட்சுமிக்கு இடையே ஆன சண்டை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த சண்டையை அனைவரும் மறந்து விடும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீரியல் நடிகை ரேகா விற்கும் அவரது கணவர் கோபிநாத்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வரும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டு சண்டையின் உச்சத்திற்கே சென்று உள்ளனர். இதனால் கோபமடைந்த கோபிநாத் தனது வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காலையில் அலுவலகப் பணியாளர்கள் வரும்போது கோபிநாத் தூக்கில் தொங்கி இருப்பதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.