சினிமா

பிரபல சீரியல் நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் ரேகாவின் கணவர் தனது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளித்திரையில் படங்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதேபோல் தான் சின்னத்திரையிலும் சீரியல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சீரியலில் நடித்த கதாநாயகிகள் தற்போது சின்னத்திரையிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.சமீபத்தில் ஜெயஸ்ரீ மற்றும் மகாலட்சுமிக்கு இடையே ஆன சண்டை சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த சண்டையை அனைவரும் மறந்து விடும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீரியல் நடிகை ரேகா விற்கும் அவரது கணவர் கோபிநாத்க்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வரும் என கூறப்படுகின்றது.

ALSO READ  முழு ஊரடங்கு...1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் கத்திக் கொண்டு சண்டையின் உச்சத்திற்கே சென்று உள்ளனர். இதனால் கோபமடைந்த கோபிநாத் தனது வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காலையில் அலுவலகப் பணியாளர்கள் வரும்போது கோபிநாத் தூக்கில் தொங்கி இருப்பதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்கில் வெளியாகும் ‘காட்டேரி’ திரைப்படம் 

News Editor

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன் !

News Editor

2020 ல் டாப் 10 ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த நடிகர்கள், நடிகைகள்…

News Editor