பாங்காக்:
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், பிரதமர் பதவி விலகுவது மற்றும் அந்நாட்டு மன்னருக்கு அதிகாரம் குறைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து,தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் மன்னர் சென்ற காரை போராட்டக்காரர்கள் மறித்தனர்.இதனால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றில் காட்டப்படும் மூன்று விரல் சல்யூட் தாய்லாந்தில் பிரபலமாகியுள்ளது.
மேலும் மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம்,மூன்று விரல் சல்யூட் செய்கிறார்கள்.இத்தகைய தொடர் போராட்டத்தின் காரணமாக, தாய்லாந்து அரசு உடனடியாக அவசர நிலை பிரகடனத்தை இயற்றி மக்கள் கூட்டத்தை விரட்டியடித்தனர்.
ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஊடகங்களில் வெளியாகுமா என்பதும் தெரியாத ஒரு சூழல் தாய்லாந்தில் நிலவுகிறது.