மீண்டும் வன்முறை தொடர்பான பதிவுகளை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளதால் அமெரிக்க அதிபர் டிரம்பின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். அதனையடுத்து அதிபர் டிரம்பை விட ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதனையடுத்து அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அதிபர் ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் அவரின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது .
#trump #accountsuspended #twitteraccountblk #america #usa #tamilthisai #donaldtrump