தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜெனீவா :
“வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும்,” என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
கொரோனா தடுப்பு தொடர்பான, ‘ஆன்லைன்’ கலந்துரையாடலில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: கொரோனா தடுப்பூசியில் முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் மருந்தையும், இரண்டாவது டோஸ் மற்றொரு நிறுவனத்தின் மருந்தையும் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும்.மேலும் 3-வது மற்றும் 4-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பதையும் மக்களே தீர்மானிக்க கூடாது. அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.