உணவு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று . சிலர் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் ஆரோக்கியமாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு சாப்பிடுவார்கள்.
பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவதில்லை. இதனால் அஜீரணக் கோளாறு போன்றவை மிகவும் சுலபமாக ஏற்படுகிறது. முக்கியமாக இரவு நேரத்தில் கம்மியான அளவே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் எளிதில் தூங்க முடியும்.
எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரவு உணவை 7 மணிக்கு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் 2 மணி நேரத்தில் நன்றாக ஜீரணமாகிவிடும்.பின்பு 10 மணிக்கு உறங்க சென்றால் எந்த வித உடல் உபாதையும் ஏற்படாது.இரவு உறங்குவதற்கு முன் எவ்வளவு சீக்கிரமாக உணவு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் உடலுக்கு நன்மை . மேலும் உங்கள் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவும்.நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவோடு முடிந்த அளவு பழங்களை எடுத்துக்கொள்வது உடலுக்கு கூடுதல் நன்மையை தரும்.