இந்தியா

பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதி. 


திலிப் குமாருக்கு நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறல் - ஒன்பிளஸ் விளக்கம்

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலிப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  

கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர்.

ALSO READ  சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்


பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான் சினிமாவில் திலீப் குமார் என்கிற பெயரில் பிரபலமானார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலிவுட்டில் நடித்துள்ளார் திலீப்குமார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

News Editor

முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor